
போதையை சாதகமாக்கி காசு சம்பாதிக்கும்
தமிழக அரசும்,கள்ள வியாபாரிகளும்…
நான் சந்தித்த 100 –ல் 98% பேர் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள் என்னையும் சேர்த்துதான். எப்போதாவதும் எப்பொழுதும் இடைப்பட்டவர்களும், வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் குடிப்பவர்களும் இதில் அடக்கம்.
என்னதான் பொருளாதார,சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெரும்பான்மையாக குடிப்பது தவறு என்ற கருத்தே நிலவுகிறது,குடிப்பவர்களுக்கும் இது புரிகிறது, இதனை அடிப்படையாக கொண்டு அரசாங்கமும்,கள்ள வியாபாரிகளும் லாபம் சம்பாதிக்கின்றனர்.
அரசாங்கமே மதுக்கடைகளை நடத்திகொண்டிருக்கும் நிலையில் நாம் கேட்கும் மது வகைகளோ பிராண்டோ கிடைப்பதில்லை, சரியான விலை பட்டியல் வைப்பதில்லை,கூட்டத்தில் அடித்துப்பிடித்து அவர்கள் தருவதைத்தான் வாங்கவேண்டியுள்ளது, பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு கடையிலும் ஸ்டாக்,விலை போன்றவைகள் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது,அதை விட அனைத்து விதமான சரக்குகளும் பெரும்பாலும் கிடைக்கிறது,சரியான பில் தரப்படுகிறது,மக்களும் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்…இது எப்படி அங்கு மட்டும் சாத்யமாகிறது ?
குறிப்பிட்ட கம்பெனிகளின் சரக்குகள் மட்டும்தான் இங்கு கிடைக்கிறது என்றால் அரசை ஆள்பவர்களுக்கும் அந்த கம்பெனிகளும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்று என்னவே தோன்றுகிறது. இதைவிட கொடுமை கிடைக்கும் சரக்கிலே டூப்ளிக்கெட் சரக்குகள் அதிகமாக இருக்கிறது என்பது குடிமக்களின் புலம்பலாக இருக்கிறது(பாட்டிலை பக்கவாட்டில் சாய்த்து மூடியின் சீலை சுற்றிப்பார்த்தால் அதில் புள்ளிபுள்ளியாக பிரஸ் செய்யப்படிருந்தால் சரக்கை எடுத்துவிட்டு தண்ணீரோ அல்லது வேறு போதை வஸ்த்துக்களோ சேர்க்கப்படிருக்கும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்)முதலில் விலை குறைந்த பிராண்டுகளில், கோட்டர்களில் ஆரம்பித்து இப்போது புல் பாட்டில்வரை ஆரம்பித்துவிட்டார்களாம், குடிக்கும் போது கள்ள சரக்கு எதாவது செய்துவிடுமோ என்ற பயமும் போதையுடன் ஒட்டிக்கொள்கிறது.
ஏன் கேட்ட சரக்கு கிடைக்கவில்லை? டூப்ளிக்கெட் வருகிறது என்று அரசாங்க ஒயின்சாப்களில் நின்று சண்டைபோட எத்தனை பேரால் முடியும்? அப்படியான சண்டை எங்கு போய்நிற்கும் ? குடிப்பதை,குடித்திருப்பதை சாதகமாக்கி கடை,பார் ஊழியர்களின் போக்கு எப்படி இருக்கும்? அசிங்கப்பட்டு,அடிவாங்கி கடையோடு முடியலாம்,போலீஸ் ஸ்டேசன் வரையும் போகலாம். எதற்காக அசிங்கப்பட்டாய் ,போலீஸ் ஸ்டேசன் சென்றாய் என்பதை வேலை செய்யும் இடத்திலோ,வீட்டிலோ,அக்கம் பக்கத்திலும் சொல்ல முடியுமா? சொல்லுவோமா? குடித்துவிட்டு தகறாறு செய்தான் என்றபேர்தான் மிஞ்சும் என்ற என்னமே நம்மை ஊமையாக்கிவிடுகிறது இதனை அரசாங்கம் நன்றாக புரிந்துவைத்திருக்கிறது.இதனால்தான் கள்ள சரக்குகள் ஒயின்சாப்களில் புழங்குகிறது.
ஒயின்சாப்களை அரசாங்கமயமாக்கி,போதையை சாதகமாக்கி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது நியாயமா?
பி.கு. குடி உடல் நலத்திற்கும்,மானத்திற்கும் கேடு
//அதை விட அனைத்து விதமான சரக்குகளும் பெரும்பாலும் கிடைக்கிறது,சரியான பில் தரப்படுகிறது,மக்களும் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்//
ReplyDeleteஅவன் பரம்பரை குடிகாரன் ..