
வெட்கமாகத்தான் இருக்கிறது ஆனால் சொல்லி ஆகத்தான் வேண்டும்…
இன்றைய நடைமுறையில் காஞ்சி கோவில் கருவரை, பெண் டாக்டர் பலரை மணந்தது, இணையத்தில் வெளியாகும் பாலியல் தொடர்பான காட்சிகள்,நாள் தவறாமல் செய்திகளில் வரும் (கள்ளத்)தொடர்புகள், செல் போண்களில் பரவும் காட்சிகள். . .
இவை உணர்த்துவது என்ன? எது இவற்றை நடத்துகிறது ? ஏன் இவை நடக்கிறது ?
நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக காட்டிகொல்லும் இச் சமுகம் பெண்கள் சார்ந்த சில விசயங்களில் குறிப்பாக பாலியலில் இன்னும் அடக்குமுறையை கையாண்டுகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எத்தனையோ பெண்கள் மவுணமாக அழுவது தெரிந்தும் தெரியாதது போல் செல்கிறோம்… அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக… இன்னும் சொல்லப்போனால் நம் சுயநலத்தையும், இயலாமையையும் மறைப்பதற்க்காக.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் ஆண்களால் பெரியளவில் பின்பற்றாதபோதும் பெண்களால் அதிகமாக நடைமுறையில் இருக்கிறது, தேவை பூர்த்தி ஆகாத போதும் சமுகம்,குடும்பம் இவைகளை மனதில் கொண்டு ஆசைகளை அடக்கிகொள்கிறாள். பின்பு வேறு எந்த காரணங்களால் அவள் வேறு ஒருவனை நாடுகிறாள்….
பெரும்பான்மையான பெண்கள் பாலியல் இன்பம் நிறைவடையாத போதுமட்டும் வேறு ஒருவனை தேடுவதில்லை அது மூன்றாம் பட்சம் தான்…
இன்றளவும் அவர்களுக்கு விருப்பமில்லாமல் பல திருமணங்கள் ஏதோ காரணங்களுக்காக நடந்துகொண்டுதான் இருக்கிறது இதுவே இச்சமுகத்தின் மேல் உள்ள பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சில ஆண்கள் மனைவிகள் மேல் செலுத்தும் வரம்புமீறிய அதிகாரமும்,தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதும்,தனது வழிகாட்டுதலும் அறிவுறைகளும் நிராகறிக்கப்படுவதும்,தனது குழந்தைகளும் தானும் சரியாக பராமறிக்கப்படாதபோதும், தன் வாழ்க்கை முழுவதும் இதே போராட்டம் தான் என்பதை உணர்வதும் சிலரை எல்லையை தாண்ட செய்கிறது.
ஏதும் செய்யமுடியாத நிலையில் தன்னை மதிக்காத கணவனையும்,சமுகத்தையும் பழிவாங்குவதற்கான ஆயுதமாக வேறு ஆணுடன் உடல் மற்றும் மனது தொடர்பான உறவுகளை ஏற்படுத்திகொள்கிறாள். எவ்வளவு சொல்லியும் தினமும் குடித்துவிட்டு வரும் ஆணுக்கு நான் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் தொடர்பை ஏற்படுத்திகொண்டு பழிவாங்குவதாக மகிழ்ச்சியடைகிறாள். வாழ்க்கையில் பெரியளவில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் அவமானப்படுபவள் இதையாவது அனுபவித்து கொள்ளலாமே என்று வேலி தாண்டுகிறாள்.
தான் மதிப்புவைத்திருக்கும் நெருங்கிய உறவினர் சிலரின் தொடர்ந்த பாலியல் தொல்லைகளும்,கணவன் தன் உடல் இச்சைக்காக மட்டும் அன்பாக பேசுகிறான் என்ற எண்ணங்களும் அவளுக்கு கற்பு ரீதியாக போதிக்கப்பட்டவைகளை மறு பரிசீலனை செய்ய தூண்டுகிறது. அவளின் குறைந்தபட்ச பாலியல் விருப்பத்தை கூட அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் அதைபற்றி கவலைப்படாமல் அவனது உடல் தேவையை மட்டும் பூர்திசெய்ய பெண்னுடன் இயங்கிவிட்டு போகும் போது அவளுக்கு என்ன தோன்றும்?
தனக்கு உடல் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியவர் அதை சரிவரதராமல் போனால் தான் வேறு ஒருவரிடம் அதை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது ?
வேறு ஒருவருடனான தொடர்பு வெளிவரும்போது அவளை மட்டுமே குற்றவாளியாக பார்க்கும் பார்வைக்கு காரணமான கணவனுக்கும் சமூகத்திற்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
???????????????????
பின் குறிப்பு: சமர்ப்பணம்-மேல் படித்தவைகளை புரிந்து கொள்ளும்
ஆண்களுக்கு
இன்றைய நடைமுறையில் காஞ்சி கோவில் கருவரை, பெண் டாக்டர் பலரை மணந்தது, இணையத்தில் வெளியாகும் பாலியல் தொடர்பான காட்சிகள்,நாள் தவறாமல் செய்திகளில் வரும் (கள்ளத்)தொடர்புகள், செல் போண்களில் பரவும் காட்சிகள். . .
இவை உணர்த்துவது என்ன? எது இவற்றை நடத்துகிறது ? ஏன் இவை நடக்கிறது ?
நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக காட்டிகொல்லும் இச் சமுகம் பெண்கள் சார்ந்த சில விசயங்களில் குறிப்பாக பாலியலில் இன்னும் அடக்குமுறையை கையாண்டுகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எத்தனையோ பெண்கள் மவுணமாக அழுவது தெரிந்தும் தெரியாதது போல் செல்கிறோம்… அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக… இன்னும் சொல்லப்போனால் நம் சுயநலத்தையும், இயலாமையையும் மறைப்பதற்க்காக.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் ஆண்களால் பெரியளவில் பின்பற்றாதபோதும் பெண்களால் அதிகமாக நடைமுறையில் இருக்கிறது, தேவை பூர்த்தி ஆகாத போதும் சமுகம்,குடும்பம் இவைகளை மனதில் கொண்டு ஆசைகளை அடக்கிகொள்கிறாள். பின்பு வேறு எந்த காரணங்களால் அவள் வேறு ஒருவனை நாடுகிறாள்….
பெரும்பான்மையான பெண்கள் பாலியல் இன்பம் நிறைவடையாத போதுமட்டும் வேறு ஒருவனை தேடுவதில்லை அது மூன்றாம் பட்சம் தான்…
இன்றளவும் அவர்களுக்கு விருப்பமில்லாமல் பல திருமணங்கள் ஏதோ காரணங்களுக்காக நடந்துகொண்டுதான் இருக்கிறது இதுவே இச்சமுகத்தின் மேல் உள்ள பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சில ஆண்கள் மனைவிகள் மேல் செலுத்தும் வரம்புமீறிய அதிகாரமும்,தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதும்,தனது வழிகாட்டுதலும் அறிவுறைகளும் நிராகறிக்கப்படுவதும்,தனது குழந்தைகளும் தானும் சரியாக பராமறிக்கப்படாதபோதும், தன் வாழ்க்கை முழுவதும் இதே போராட்டம் தான் என்பதை உணர்வதும் சிலரை எல்லையை தாண்ட செய்கிறது.
ஏதும் செய்யமுடியாத நிலையில் தன்னை மதிக்காத கணவனையும்,சமுகத்தையும் பழிவாங்குவதற்கான ஆயுதமாக வேறு ஆணுடன் உடல் மற்றும் மனது தொடர்பான உறவுகளை ஏற்படுத்திகொள்கிறாள். எவ்வளவு சொல்லியும் தினமும் குடித்துவிட்டு வரும் ஆணுக்கு நான் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் தொடர்பை ஏற்படுத்திகொண்டு பழிவாங்குவதாக மகிழ்ச்சியடைகிறாள். வாழ்க்கையில் பெரியளவில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் அவமானப்படுபவள் இதையாவது அனுபவித்து கொள்ளலாமே என்று வேலி தாண்டுகிறாள்.
தான் மதிப்புவைத்திருக்கும் நெருங்கிய உறவினர் சிலரின் தொடர்ந்த பாலியல் தொல்லைகளும்,கணவன் தன் உடல் இச்சைக்காக மட்டும் அன்பாக பேசுகிறான் என்ற எண்ணங்களும் அவளுக்கு கற்பு ரீதியாக போதிக்கப்பட்டவைகளை மறு பரிசீலனை செய்ய தூண்டுகிறது. அவளின் குறைந்தபட்ச பாலியல் விருப்பத்தை கூட அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் அதைபற்றி கவலைப்படாமல் அவனது உடல் தேவையை மட்டும் பூர்திசெய்ய பெண்னுடன் இயங்கிவிட்டு போகும் போது அவளுக்கு என்ன தோன்றும்?
தனக்கு உடல் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியவர் அதை சரிவரதராமல் போனால் தான் வேறு ஒருவரிடம் அதை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது ?
வேறு ஒருவருடனான தொடர்பு வெளிவரும்போது அவளை மட்டுமே குற்றவாளியாக பார்க்கும் பார்வைக்கு காரணமான கணவனுக்கும் சமூகத்திற்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
???????????????????
பின் குறிப்பு: சமர்ப்பணம்-மேல் படித்தவைகளை புரிந்து கொள்ளும்
ஆண்களுக்கு