Tuesday, July 6, 2010

கொலைகளும் தற்கொலைகளும்



இன்றைய செய்திதாள்களில்கூட திருமணமான பெண் தன் பழைய காதலனுடன் சென்றதால் சமாதானம் பேச அழைத்து காதலனை வெட்டி கொன்றதோடு அவளையும் கொல்ல முயன்றனர் அவளின் தந்தை மற்றும் சகோதரர்கள் என்ற செய்தியும் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற மனைவியை திரும்ப அழைத்து வந்த கணவன் அவளை கொன்றதோடு எரித்தும் இருக்கிறார் என்ற செய்தியும் இடம் பிடித்து இருக்கிறது,இது போன்ற செய்திகள் நாள் தவறாமல் வரத்தான் செய்கிறதுஇது எல்லா மட்டத்திலும் கொலைகளாகவும் தற்கொலைகளாகவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

தன் பழைய காதலனுடன் சென்றதற்கு யார் காரணம் கொலை செய்த அதே பெற்றோர்கள்தானே காரணமாக இருக்கமுடியும்.அவளை முதலிலேயெ காதலனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் அவள் ஏன் திருமணமான பிறகு ஒடப்போகிறாள்? அவள் விரும்பிய வாழ்க்கையை தர மறுத்தது எது ? ஜாதியா?குடும்ப பகையா ? கவுரவமா…? யாருக்காக இதனைப்பார்க்கிறிர்கள் உங்களுக்காகவா? அல்லது சுற்றி இருப்பவர்கள் உங்களைப்பற்றி நினப்பதாக நீங்களே நினைத்துக்கொள்ளும் கற்பனைக்காகவா? எதுவாக இருந்தாலும் முதலில் அவளின் ஆசையக் கொன்று பின்பு அவளின் வாழ்க்கையையும் கொன்று இறுதியாக காதலனையும் கொன்று சற்று தாமதித்திருந்தால் அவளையும் கொன்றிருப்பிற்கள், யோசித்துப்பாருங்கள் அவளை வாழப் பெற்றிர்களா ? கொலைசெய்து நீங்ளும் உங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்ள பெற்றீர்களா?

அடுத்து வேறுஒருவருடன் குடும்பம் நடத்த சென்ற பெண்னை கொன்ற கணவன்அவளை வைத்து சரியாக குடும்பம் நடத்தி இருந்தால் அவள் ஏன் ஒடிப்போகப்போகிறாள், சரியான மரியாதையையும் ,சாப்பாட்டையையும்,உடலுறவையும் அவளுக்கு தந்திருக்கப்பட்டிருக்குமா? கிடைக்காதபோது கிடைக்கும் இடத்துக்கு செல்கிறாள்.உன்னால் ஒழுங்காக தரப்பட முடியாததை இன்னொருவம் தரக்கூடாது என்ற மனோபாவம் எதைக்காட்டுகிறது ? அவளின் பக்கம் இருந்து மனப்போரட்டத்தையும் உணர்வுகளையும் பார்த்திருந்தால் அவள் எவ்வளவு பாவம் என்று புரிந்திருக்கும்.பிடிக்கவில்லை என்று தானே விட்டு சென்றால் அவளை அழைத்து வந்து கொன்றது எவ்வளவு குரூரம்.கொலைக்குற்றத்தில் சிக்கி அவனும் சீரழிந்தானே.

அவளின் விருப்பத்தை சகித்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் ஆனால் கொலையோ தற்கொலையோ செய்து வாழ்வை தொலைத்து விடாதிர்கள்,நாம் காட்டுமிராண்டிகள் அல்ல யோசித்து அறிந்துகொள்பவர்கள்.

திருமணம் என்பது என்ன பிறவியா ஒருமுறை மட்டும் நிகழ்வதற்கு, அது ஒரு சம்பவம் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து சென்று வேறு பிடித்தமான வாழ்க்கையை அமைத்துகொண்டு நிறைவாக வாழ்வதை விட்டு இறக்கவைத்து இறந்து என்ன செய்யப்போகிறோம்...

Friday, May 28, 2010

போதையை சாதகமாக்கி




போதையை சாதகமாக்கி காசு சம்பாதிக்கும்
தமிழக அரசும்,கள்ள வியாபாரிகளும்…


நான் சந்தித்த 100 –ல் 98% பேர் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள் என்னையும் சேர்த்துதான். எப்போதாவதும் எப்பொழுதும் இடைப்பட்டவர்களும், வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் குடிப்பவர்களும் இதில் அடக்கம்.
என்னதான் பொருளாதார,சமூக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெரும்பான்மையாக குடிப்பது தவறு என்ற கருத்தே நிலவுகிறது,குடிப்பவர்களுக்கும் இது புரிகிறது, இதனை அடிப்படையாக கொண்டு அரசாங்கமும்,கள்ள வியாபாரிகளும் லாபம் சம்பாதிக்கின்றனர்.
அரசாங்கமே மதுக்கடைகளை நடத்திகொண்டிருக்கும் நிலையில் நாம் கேட்கும் மது வகைகளோ பிராண்டோ கிடைப்பதில்லை, சரியான விலை பட்டியல் வைப்பதில்லை,கூட்டத்தில் அடித்துப்பிடித்து அவர்கள் தருவதைத்தான் வாங்கவேண்டியுள்ளது, பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு கடையிலும் ஸ்டாக்,விலை போன்றவைகள் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது,அதை விட அனைத்து விதமான சரக்குகளும் பெரும்பாலும் கிடைக்கிறது,சரியான பில் தரப்படுகிறது,மக்களும் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்…இது எப்படி அங்கு மட்டும் சாத்யமாகிறது ?

குறிப்பிட்ட கம்பெனிகளின் சரக்குகள் மட்டும்தான் இங்கு கிடைக்கிறது என்றால் அரசை ஆள்பவர்களுக்கும் அந்த கம்பெனிகளும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்று என்னவே தோன்றுகிறது. இதைவிட கொடுமை கிடைக்கும் சரக்கிலே டூப்ளிக்கெட் சரக்குகள் அதிகமாக இருக்கிறது என்பது குடிமக்களின் புலம்பலாக இருக்கிறது(பாட்டிலை பக்கவாட்டில் சாய்த்து மூடியின் சீலை சுற்றிப்பார்த்தால் அதில் புள்ளிபுள்ளியாக பிரஸ் செய்யப்படிருந்தால் சரக்கை எடுத்துவிட்டு தண்ணீரோ அல்லது வேறு போதை வஸ்த்துக்களோ சேர்க்கப்படிருக்கும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்)முதலில் விலை குறைந்த பிராண்டுகளில், கோட்டர்களில் ஆரம்பித்து இப்போது புல் பாட்டில்வரை ஆரம்பித்துவிட்டார்களாம், குடிக்கும் போது கள்ள சரக்கு எதாவது செய்துவிடுமோ என்ற பயமும் போதையுடன் ஒட்டிக்கொள்கிறது.
ஏன் கேட்ட சரக்கு கிடைக்கவில்லை? டூப்ளிக்கெட் வருகிறது என்று அரசாங்க ஒயின்சாப்களில் நின்று சண்டைபோட எத்தனை பேரால் முடியும்? அப்படியான சண்டை எங்கு போய்நிற்கும் ? குடிப்பதை,குடித்திருப்பதை சாதகமாக்கி கடை,பார் ஊழியர்களின் போக்கு எப்படி இருக்கும்? அசிங்கப்பட்டு,அடிவாங்கி கடையோடு முடியலாம்,போலீஸ் ஸ்டேசன் வரையும் போகலாம். எதற்காக அசிங்கப்பட்டாய் ,போலீஸ் ஸ்டேசன் சென்றாய் என்பதை வேலை செய்யும் இடத்திலோ,வீட்டிலோ,அக்கம் பக்கத்திலும் சொல்ல முடியுமா? சொல்லுவோமா? குடித்துவிட்டு தகறாறு செய்தான் என்றபேர்தான் மிஞ்சும் என்ற என்னமே நம்மை ஊமையாக்கிவிடுகிறது இதனை அரசாங்கம் நன்றாக புரிந்துவைத்திருக்கிறது.இதனால்தான் கள்ள சரக்குகள் ஒயின்சாப்களில் புழங்குகிறது.
ஒயின்சாப்களை அரசாங்கமயமாக்கி,போதையை சாதகமாக்கி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது நியாயமா?
பி.கு. குடி உடல் நலத்திற்கும்,மானத்திற்கும் கேடு

Thursday, March 11, 2010

வெட்கப் படவேண்டியவர்கள் தொலைக்காட்சியும், பத்திரிகையும் தான் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் அல்ல…

மனிதன் படைக்கப்பட்டதிலிருந்து இயற்கையாக உருவாக்கப்பட்டவை பசி,தாகம்,தூக்கம்,வலி,உணர்வுகள்,உடல் உறவு போன்றவைகள், மற்ற அனைத்தும் கடவுள் உட்பட மனிதனால் தன் தேவை,பயம்,ஆசை,சுயநலம் போன்றவைகளுக்காக உருவாக்கப்பட்டவையே.
ஆன்மிகம் ஒரு காலகட்டத்தில் வாழ்கைக்கான அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது.பின்பு வந்த அறிவியல் அதனை தகற்த்தது. உலகம் உருண்டை என்று ஆணித்தறமாக நாம் இப்போது எந்தளவு நம்புகிறோமோ அதே அளவு நம்பிக்கை உலகம் சதுரமானது, பாய் போன்று நீளமானது என்று நம்பப்பட்டது. இரண்டிற்கும் காரணம் ஆன்மிகம்-அறிவியல். வருங்காலத்தில் வேறு ஒன்று தோன்றி இரண்டுமே உண்மையில்லை என சொல்லலாம் அதையும் வரும் தலைமுறை நம்பலாம் நாம் அப்போது முட்டாளாகலாம்.பழைய தலைமுறை, நடப்பு தலைமுறை வரும் தலைமுறைகளின் வாழ்கை சூழலுக்கு ஏற்ப மாறும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையே.
இன்று ஆன்மிகம் என்பது தெளிவான வியாபாரமே, ஒருவனது துயரத்தை காதுகொடுத்து கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதே எவ்வளவு ஆறுதல்.துயரத்தில் வரும் ஒருவனுக்கு மனநிம்மதியை தறுகிறது என்றால் அதற்காக கட்டணம் பெறுவதும்,தறுவதும் தவறில்லையே. இவ்வாறு பெற்ற பணத்தை ஏழைகளின் முண்னேற்றத்திற்காக மருத்துவமனை, கல்வி, சாலைகள், தானங்கள் தருவதில் நன்மையே.
மருத்துவராக இருப்பவர் நோயாளிகளுக்கு தரும் மருந்துகளை அவரும் எடுத்துகொள்ள வேண்டிய அவசியமில்லையே. ஒருவர் தான் செய்யும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார என்பதை பார்க்கவேண்டுமே தவிர அவரது சொந்த இயற்கையான உணர்வுகளை பார்த்து தீயவன் என்பதில் என்ன நியாயம் ?
நித்தியானந்தா என்ற ஒரு ஆணும், ரஞ்சிதா என்ற பெண்னும் தங்களது சுய விருப்பத்துடன் உடல் உறவு கொல்வதில் என்ன தவறு ?
இவ்வாறாக நடந்த உறவை தொலைக்காட்சியின் மூலமும் பத்திரிகையின் மூலமும் வெளியிட்டதே தவறு….இது தொடர்ந்தால் ஒரு கணவனும் மனைவியும் உடல் உறவு கொண்ட காட்சி என வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை…..

Friday, February 26, 2010

வெட்கமாகத்தான் இருக்கிறது...


வெட்கமாகத்தான் இருக்கிறது ஆனால் சொல்லி ஆகத்தான் வேண்டும்
இன்றைய நடைமுறையில் காஞ்சி கோவில் கருவரை, பெண் டாக்டர் பலரை மணந்தது, இணையத்தில் வெளியாகும் பாலியல் தொடர்பான காட்சிகள்,நாள் தவறாமல் செய்திகளில் வரும் (கள்ளத்)தொடர்புகள், செல் போண்களில் பரவும் காட்சிகள். . .
இவை உணர்த்துவது என்ன? எது இவற்றை நடத்துகிறது ? ஏன் இவை நடக்கிறது ?
நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக காட்டிகொல்லும் இச் சமுகம் பெண்கள் சார்ந்த சில விசயங்களில் குறிப்பாக பாலியலில் இன்னும் அடக்குமுறையை கையாண்டுகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. எத்தனையோ பெண்கள் மவுணமாக அழுவது தெரிந்தும் தெரியாதது போல் செல்கிறோம்… அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக… இன்னும் சொல்லப்போனால் நம் சுயநலத்தையும், இயலாமையையும் மறைப்பதற்க்காக.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் ஆண்களால் பெரியளவில் பின்பற்றாதபோதும் பெண்களால் அதிகமாக நடைமுறையில் இருக்கிறது, தேவை பூர்த்தி ஆகாத போதும் சமுகம்,குடும்பம் இவைகளை மனதில் கொண்டு ஆசைகளை அடக்கிகொள்கிறாள். பின்பு வேறு எந்த காரணங்களால் அவள் வேறு ஒருவனை நாடுகிறாள்….
பெரும்பான்மையான பெண்கள் பாலியல் இன்பம் நிறைவடையாத போதுமட்டும் வேறு ஒருவனை தேடுவதில்லை அது மூன்றாம் பட்சம் தான்…
இன்றளவும் அவர்களுக்கு விருப்பமில்லாமல் பல திருமணங்கள் ஏதோ காரணங்களுக்காக நடந்துகொண்டுதான் இருக்கிறது இதுவே இச்சமுகத்தின் மேல் உள்ள பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சில ஆண்கள் மனைவிகள் மேல் செலுத்தும் வரம்புமீறிய அதிகாரமும்,தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதும்,தனது வழிகாட்டுதலும் அறிவுறைகளும் நிராகறிக்கப்படுவதும்,தனது குழந்தைகளும் தானும் சரியாக பராமறிக்கப்படாதபோதும், தன் வாழ்க்கை முழுவதும் இதே போராட்டம் தான் என்பதை உணர்வதும் சிலரை எல்லையை தாண்ட செய்கிறது.
ஏதும் செய்யமுடியாத நிலையில் தன்னை மதிக்காத கணவனையும்,சமுகத்தையும் பழிவாங்குவதற்கான ஆயுதமாக வேறு ஆணுடன் உடல் மற்றும் மனது தொடர்பான உறவுகளை ஏற்படுத்திகொள்கிறாள். எவ்வளவு சொல்லியும் தினமும் குடித்துவிட்டு வரும் ஆணுக்கு நான் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் தொடர்பை ஏற்படுத்திகொண்டு பழிவாங்குவதாக மகிழ்ச்சியடைகிறாள். வாழ்க்கையில் பெரியளவில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் அவமானப்படுபவள் இதையாவது அனுபவித்து கொள்ளலாமே என்று வேலி தாண்டுகிறாள்.
தான் மதிப்புவைத்திருக்கும் நெருங்கிய உறவினர் சிலரின் தொடர்ந்த பாலியல் தொல்லைகளும்,கணவன் தன் உடல் இச்சைக்காக மட்டும் அன்பாக பேசுகிறான் என்ற எண்ணங்களும் அவளுக்கு கற்பு ரீதியாக போதிக்கப்பட்டவைகளை மறு பரிசீலனை செய்ய தூண்டுகிறது. அவளின் குறைந்தபட்ச பாலியல் விருப்பத்தை கூட அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் அதைபற்றி கவலைப்படாமல் அவனது உடல் தேவையை மட்டும் பூர்திசெய்ய பெண்னுடன் இயங்கிவிட்டு போகும் போது அவளுக்கு என்ன தோன்றும்?
தனக்கு உடல் தேவையை பூர்த்திசெய்ய வேண்டியவர் அதை சரிவரதராமல் போனால் தான் வேறு ஒருவரிடம் அதை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது ?
வேறு ஒருவருடனான தொடர்பு வெளிவரும்போது அவளை மட்டுமே குற்றவாளியாக பார்க்கும் பார்வைக்கு காரணமான கணவனுக்கும் சமூகத்திற்கும் என்ன தண்டனை கொடுப்பது ?
???????????????????
பின் குறிப்பு: சமர்ப்பணம்-மேல் படித்தவைகளை புரிந்து கொள்ளும்
ஆண்களுக்கு