நம்மில் பலர் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு புலம்பெயர்ந்தவர்களாகவே இருக்கிறோம்.
புதிய தொழில்களும் அதனை சார்ந்த குடியிருப்புகளும் உருவாகும்போது, நாம் அதற்கு பொருந்தாதபோது நம்மை சூழ்நிலை இடம்பெயர செய்கிறது ஏன் நிர்பந்தமாகவே துரத்துகிறது. நாம் வெளியேறி அடையாளத்தை தொலைத்த பிறகு அந்த மண்ணும் உருமாறி வேறு வர்ணம் பூசிக்கொள்கிறது.
சொந்த மண்ணைவிட்டு வருவது தன் சொந்தங்களையும் அடையாளங்களையும் படிபடியாக இழப்பதின் ஆரம்பமே, அடையாளம் இழந்தவனை எங்கோ ஏதோ ஒரு மூலையில் வாழ்கை அவனை நடத்திகொண்டிருக்கிறது, பணமும் சந்தோசமும் இருக்கும்போது ஊரின் திருவிழாவிற்கு வந்துசெல்பவன் அது இல்லாதபோது தவிற்கிறான். சொந்தங்களின் திருமணத்திற்கும்,மரணத்திற்கும் மட்டுமே ஊரின் பக்கம் தலைகாட்டுபவன் புதிய மனிதர்களையும் சூழ்நிலைகளையும் தனது மண்னிலேயே சந்திக்க, தன் பூர்விகம் தன்னிடமிருந்து அந்நியமாவதை உணர்கிறான், வேறு வழியின்றி வாழ்கை தன்னை அடைத்துவைத்திருக்கும் இடத்தை தனதாக்க முயல்கிறான், இழந்த சொந்தங்களுக்கு ஈடாக நட்புகளை நாடுகின்றான்.
சொந்த மண்ணை தொலைத்தவன் வேறு என்னன்ன தொலைத்தான் என்பது பெருமூச்சோடு யோசிக்கும்போது அவனுக்கு மட்டுமே தோன்றி மறையும் மாயக்காட்சி.
அனைத்தும் மாறிக்கொண்டேதான் இருக்கும், மனிதர்களும் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள்.
பின் குறிப்பு
சில வீட்டுப் பெயர்கள்
லாலா வீடு, பிஞ்சு வீடு, எலி வீடு, டப்பா வீடு, மாவு வீடு, இட்லர் வீடு, சொந்தகாரமூடு, ருக்குமூடு, காட வீடு, மெலாட்டகார வீடு, கச்சகாரமூடு,காராமணி வீடு, வெல்தான்மூடு
சந்தடிச்சான் சம்மந்தம், கோயிலிடிச்சான் கோவிந்தன், தூண்டிவிட்டான் துக்காரம், ஒன்றை இட்லி கிழவி, ஊசி, குண்டு, எக்காளு, போண்டா